மாவட்ட நிகழ்வுகள்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறுதிறன் அடிப்படைகலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமானமுன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழுபணியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

February 24, 2026

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி II / IIA பணிகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுரை

February 6, 2026

புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில்  ஒப்பந்தத்தின் அடிப்படையில் வட்டார ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி 16.02.2026  மாலை 05.00  மணி

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திற்காக ஆறு சட்டமன்றத் தொகுதிக்கு 101 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

February 3, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் உயர்தர மறுவாழ்வு பயிற்சி வழங்கிட ஒருங்கிணைந்த சேவைமையம் தொடங்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் ஒவ்வொன்றிற்கும் குறைந்தது 10 மாற்றுத் திறனாளிகளைப் பணியமரத்தி இருந்தால் அத்தகைய நிறுவனங்களுக்கு மாதம் தோறும் ஒரு நபருக்கு 24000 ஊதிய மானியமாக ஒரு ஆண்டிற்கு வழங்க முடிவெடுத்துள்ளது முடிவெடுத்து அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடன் ஆமை மற்றும் கடற்பசுக்கள் அழிந்துவரும் இனம் ஆகும். வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972- ன்படி அவை பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், அவைகளை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மாபட்டினம், பொன்னகரம், கீழக்குடியிருப்பு மற்றும் கட்டுமாவடி பகுதிகளில் கடற்பசு அதிகமாக காணப்படும் பகுதிகள் ஆகும் இப்பகுதிகள் கடற்பசு பாதுகாப்பு பகுதிகளாக வரையறை செய்யப்பட்டுள்ளது.

January 13, 2026

2026 -ஆம் ஆண்டுக்கான “சிறந்த திருநங்கைகாண விருது” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ளது.

குறல் வார விழாவின் ஒரு நிகழ்வாக பொதுமக்கள் மட்டும் கலந்துகொள்ளும் குறல் சார்ந்த ஓவியப்போட்டி மற்றும் குரல் ஒப்பித்தல் போட்டி புதுக்கோட்டை, மாற்றுமை தங்கிய மன்னர் கல்லூரியில் 19.01. 2026 திங்கள்கிழமை அன்று நடத்தப்பெறவுள்ளது.

முக்கிய அறிவிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசின் அனுமதி பெற்ற ஒரே வானொலி நிலையம் புதுகை எஃப்.எம் 91.2 சமுதாய வானொலி மட்டுமே என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். எப்.எம் ரேடியோ, ரேடியோ ஸ்டேஷன் என்று செய்யப்படும் போலி விளம்பரங்களை பொது மக்கள் நம்பி ஏமாறவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

January 9, 2026

2025 பசுமை சாம்பியன் விருதுக்கான விண்ணப்பங்களை ஜனவரி 20 2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

December 5, 2025

ஆனைக் கொம்பன் ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை.

November 22, 2025

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் 100 பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, மற்றும் சீர் மரபின மாணவ -மாணவியர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கும் திட்டம் .

September 29, 2025

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மானாடர்களின் கல்வி மேம்பாட்டிற்காக 2025 -2026 ஆம் கல்வியாண்டிற்கு கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.

August 25, 2025