தமிழ்நாடு அரசு, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மிஷன் வாத்சல்யா குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், பாதுகாப்பு அலுவலர் 02 காலிப்பணியிடத்தினை தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்திட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சிய கரத்தில் 24. 06. 2025 அன்று காலை 10:00 மணி அளவில் நடைபெற உள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியினை மேம்படுத்தும் பொருட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் 1799 குழந்தைகள் மையங்களில் சத்து மாவு, ஊட்டச்சத்துடன் கூடிய உணவு மற்றும் முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகிறது.
திருச்சி சேதுரப்பட்டியில் உள்ள ஸ்ரீரங்கம், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025 -2026 ஆம் கல்வியாண்டில் டிப்ளமோ முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு ஆகியவற்றில் சேர நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, விராலிமலை மற்றும் கீரனூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்திட இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடும் வகையில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தடை மற்றும் தீர்வு சட்டம் 2013 கீழ் உள்ள புகார் குழு அமைக்கப்பட வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறையின் இ-வாடகை திட்டத்தில் உழவர் செயலியின் மூலம் குறைந்த செலவில் வேளாண் கருவிகளை வாடகைக்கு பெற்று பயன்பரலாம்.